Tuesday, April 7, 2026

திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கும் ஸ்டாலின்…

Must read

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான நாட்களே உள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு, வேட்பாளர் பட்டியல் வெளியீடு என்று தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக, திமுக தனது தேர்தல் பிரச்சாரத்தை துவங்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, வரும் ஏப்ரல் 2ஆம் தேதி திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான முக ஸ்டாலின் திருவாரூரில் இருந்து தனது தேர்தல் பரப்புரையை தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் சொந்த ஊர் திருவாரூர் என்பது கவனிக்கத்தகுந்தது. திருவாரூரை அடுத்து ஜெயங்கொண்டம், திருவெறும்புதூர் ஆகிய தொகுதிகளில் வாக்கு சேகரிக்கவும் ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து ஏப்ரல் 3ஆம் தேதி திருச்சியிலும், ஏப்ரல் 4இல் கரூர், திருப்பூரிலும், ஏப்ரல் 5 ஆம் தேதி நாகர்கோவில், திருநெல்வேலியிலும், ஏப்ரல் 7ஆம் தேதி கோயம்புத்தூர், மேட்டுப்பாளையத்திலும் அவர் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.

ஏப்ரல் 8ஆம் தேதி ஈரோடு, பரமத்திவேலூரிலும், ஏப்ரல் 9 அன்று தருமபுரி, கிருஷ்ணகிரியிலும், ஏப்ரல் 10 ஆம் தேதி வேலூர் மற்றும் ஆரணி ஆகிய தொகுதிகளிலும் அவர் பரப்புரை மேற்கொள்ள இருக்கின்றார். இதற்கு அடுத்தபடியாக ஏப்ரல் 11ஆம் தேதி சிவகங்கை, மதுரையிலும், ஏப்ரல் 12ஆம் தேதி விருதுநகர், சங்கரன்கோவிலிலும், ஏப்ரல் 13ஆம் தேதி தஞ்சாவூர், மயிலாடுதுறையிலும் ஸ்டாலின் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க உள்ளார்.ஏப்ரல் 14ஆம் தேதி விழுப்புரம், நெய்வேலியிலும், ஏப்ரல் 15ஆம் தேதி ராணிப்பேட்டை, அணைக்கட்டிலும், ஏப்ரல் 16 கள்ளக்குறிச்சி. சேலம் ஆகிய தொகுதிகளிலும் முதலமைச்சர் பரப்புரையை மேற்கொள்ளவுள்ளார். தொடர்ந்து ஏப்ரல் 17-இல் தேனி மற்றும் ஆண்டிப்பட்டியில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்-ஐ ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார் முதலமைச்சர் முக ஸ்டாலின். ஏப்ரல் 18 அன்று ராமநாதபுரம் மற்றும் விளாத்திகுளத்திலும், ஏப்ரல் 19 ஆம் தேதி செங்கல்பட்டு மற்றும் பெரம்பலூரிலும், 21 -ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் மற்றும் இறுதியாக அவரது கொளத்தூரிலும் தொகுதியில் பிரச்சாரம் செய்ய முதலமைச்சர் முக ஸ்டாலின் திட்டமிட்டுள்ளார்.

அதன்படி ஏப்ரல் 2 முதல் 21 ஆம் தேதி வரை அவர் தொடர் பிரச்சார பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளவிருக்கின்றார். தினந்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டு பிரச்சாரம் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக ஏப்ரல் 6 -ம் தேதி, மு.க. ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முதல் தனது தேர்தல் பிரச்சாரம் பயணத்தை துவக்கி உள்ளார் என்பது கவனிக்கத்தகுந்தது. இதேபோன்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தமிழ்நாடு முழுவதிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...