Tuesday, February 17, 2026

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழப்பு…

Must read

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...

கமல் ஹாசன் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…

நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் (71) திரைத்துறையில் நாயகன், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், பாடகர் என பன்முகதன்மையுடன் சுமார் 65 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,...

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழப்பு…

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். இந்த மலைத்தொடர் தான் கேரள - தமிழக எல்லையாகவும் திகழ்கிறது. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும்...

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். இந்த மலைத்தொடர் தான் கேரள – தமிழக எல்லையாகவும் திகழ்கிறது. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி 20 கிலோ மீட்டருக்கு மேல், வனப்பகுதிக்குள் செல்கின்றன. இந்த மலைப்பகுதியில் யானைகள் அதிகம் வசித்து வருகின்றன. கடந்த 25 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் ரயிலில் அடிபட்டு சுமார் 25க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன.
யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க, நீதிமன்ற உத்தரவின்படி தமிழக வனத்துறையின் சார்பில் ஏஐ உதவியோடு இயங்கும் தெர்மல் கேமராக்கள், மதுக்கரை முதல் வாளையார் வரை பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தமிழக எல்லைப்பகுதிகளில் வசிக்கிற யானைகள் கண்காணிக்கப்படுகின்றன. இதனால் யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரள வனப்பகுதியில் தெர்மல் கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதால், யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. கேரள வனப்பகுதியான வாளையார் பூங்கா அருகே இன்று காலை 4.30 மணியளவில், கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 வயது ஆண் யானையின் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் யானை உடல் சிதறி உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்த யானையின் உடல்பாகங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வன ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், “கேரளா எல்லைப் பகுதியான வாளையார் அருகே ரயில் மோதி யானை உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. எட்டிமடை – மதுக்கரை இடையே தமிழக வனத்துறையின் சிறப்பான முயற்சியால் 12 கோபுரங்களில் தலா இரண்டு கேமராக்கள் உட்பட மொத்தம் 24 தெர்மல் சென்சிங் கேமராக்கள் பொருத்தப்பட்டு யானைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த வழித்தடத்தில் 2022 அக்டோபர் மாதம் முதல் ரயில் மோதி யானைகள் எதுவும் உயிரிழக்கவில்லை.

எனவே தமிழக வனத்துறைக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது போல வாளையார் – கொல்லங்கோடு இடையேயும் தெர்மல் சென்சிங் கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்று ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க முடியும். ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுவதும் 10 முதல் 15 யானைகள் ரயில் மோதி உயிரிழக்கின்றன. எனவே ரயில்வே துறை இந்த விஷயத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...

கமல் ஹாசன் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…

நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் (71) திரைத்துறையில் நாயகன், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், பாடகர் என பன்முகதன்மையுடன் சுமார் 65 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,...

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழப்பு…

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். இந்த மலைத்தொடர் தான் கேரள - தமிழக எல்லையாகவும் திகழ்கிறது. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும்...

வரும் 6ஆம் தேதி முதல் விருப்பமான பெற்றுக் கொள்ளலாம் தவெக அறிவிப்பு..!

சட்டப் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 6 முதல் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.