Wednesday, February 18, 2026

எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு – தொகுதி பங்கீடு பேச்சா?

Must read

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து பேசினார். அதிமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில், அதிமுக கூட்டணியில் இடம்பெறும் கட்சிகள் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும், இந்த கூட்டத்தில் பாஜகவுக்கு அதிர்ச்சி வைத்தியம் அளிக்கும் விதமாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதாவது திமுக என்ற தீயசக்தியை வீழ்த்தும் நோக்கத்துடனும், திமுக எதிர்ப்பு வாக்குகளை சிதறவிடாமல் தடுக்கும் ராஜதந்திரத்துடனும் பாஜகவை அதிமுக தலைமையிலான கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி இணைத்திருக்கிறார்  என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணி என்று கூறாமல், அதிமுக தலைமையிலான கூட்டணி என்ற வார்த்தை அழுத்தம் திருத்தமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி தனித்து ஆட்சியமைக்கும் எனவும் எடப்பாடி பழனிசாமி தனது உரையில் தெரிவித்தார்.
அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள், ‘கூட்டணி ஆட்சி’ என்ற சொல்லாடலை தொடர்ந்து பயன்படுத்தி வந்த நிலையில், தனித்து ஆட்சி எனக் கூறி பாஜகவுக்கு நேரடியாக பதிலடி கொடுத்துள்ளார் எடப்பாடி பழனிசாமி.எடப்பாடி – நயினார் நாகேந்திரன் சந்திப்பு இந்த சூழலில், சென்னை கிரீன்வேஸ் சாலை உள்ள இல்லத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்து பேசினார். சுமார் ஒரு மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. பிறகு செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரனிடம்,

எடப்பாடி பழனிசாமியிடம் தொகுதி பங்கீடு குறித்து பேசினீர்களா? எனக் கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுக்குழுக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. அதற்காக எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தேன். தொகுதி பங்கீடு பற்றி எதுவும் பேசவில்லை” என்றார். டிடிவி தினகரன், ஓபிஎஸ்-ஐ கூட்டணிக்கு கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு, இல்லை என பதிலளித்தார். தொடர்ந்து பேசிய அவர் நாளை மறுதினம் டெல்லி செல்ல உள்ளதாக தெரிவித்தார்.

தேமுதிக, பாமகவை கூட்டணிக்குள் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதா ? என்ற கேள்விக்கு, பதில் அளிக்காமல் சிரித்தபடி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...