Wednesday, February 18, 2026

கொள்ளையனிடமே கொள்ளை.. லஞ்ச வழக்கிலும் சிக்கிய இன்ஸ்பெக்டர்..!

Must read

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கன்னியாகுமரி மாவட்டம், நேசமணி காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் அன்பு பிரகாஷ். சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக குமரி மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களிலும் இவர் பணி புரிந்துள்ளார். இந்நிலையில், இவர் களியக்காவிளை காவல் நிலையத்தில் பணிபுரிந்த போது ஒருவர் கொள்ளையடித்த 38 சவரன் நகைகளில் சுமார் 20 பவுன் நகைகளை இவர் கொள்ளையடித்ததாக வழக்கு நடந்து வருகிறது.

அது தவிர, ஏற்கனவே அன்பு பிரகாஷ் வீட்டில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது. அப்போது அவரது வீட்டில் மேற்படி திருட்டு நகைகள் இருந்ததும் அம்பலமானது. அது தொடர்பான வழக்கும் லஞ்ச ஒழிப்பு பிரிவில் நிலுவையில் உள்ளது. நேசமணி நகர் காவல் நிலைய ஆய்வாளராக தற்போது அவர் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், ‘சந்தை’ ராஜன் என்பவர் தன்னை ஒரு வழக்கில் ஆய்வாளர் அன்பு பிரகாஷ் பொய்யாக சேர்த்து உள்ளதாகவும், அதில் இருந்து விடுவிக்க லஞ்சம் கேட்டு மிரட்டியதாகவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில், மாவட்ட காவல் கண்காணிப்பாளரும் ‘சந்தை’ ராஜனை விடுவித்து வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய அன்பு பிரகாஷ்க்கு உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அவர் வழக்கில் இருந்து விடுவிக்க 3 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. அதில் ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை பெற்ற அவர், மீதி ரூ.1,15,000 தந்தால் மட்டுமே வழக்கில் இருந்து விடுவிக்க இயலும் என்றும், இல்லை என்றால் குற்றப்பத்திரிகையில் பெயரை சேர்த்து விடுவதாகவும் ‘சந்தை’ ராஜனை மிரட்டியதாக கூறப்படுகிறது.லஞ்சம் கொடுக்க விரும்பாத ‘சந்தை’ ராஜனை லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்து உள்ளார். உடனே லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாயை அவரிடம் கொடுத்து அனுப்பி உள்ளனர். பின்னர் அன்பு பிரகாஷ் கேட்டபடி வெள்ளமடத்தில் உள்ள அவரது வீட்டிற்கு சென்ற ‘சந்தை’ ராஜனை ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை கொடுத்து உள்ளார்.

அப்போது லஞ்ச பணத்தை வாங்கிய அன்பு பிரகாஷை அங்கு மறைந்திருந்த இருந்த லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் எஸ்கால், உதவி ஆய்வாளர் பொன்சன், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், அருண் அசரியா உள்ளிட்ட போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியிலும், போலீஸ் வட்டாரத்திலும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குற்றத்தை தடுக்க வேண்டிய காவல் அதிகாரியே குற்றச்செயலில் தொடர்ந்து பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியும், வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...