Wednesday, February 18, 2026

கோவை சிங்காநல்லூர் சாலையில் காரோடு இழுத்துச் செல்லப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்..! பட்டப்பகலில் நடந்த பயங்கரம்..!

Must read

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் வசந்தாமில் அருகே நேற்று சுடலைமுத்து என்பவர் சரக்கு ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது ஆட்டோவை திருப்பும் போது, அந்த வழியாக வந்த கார் மீது லேசாக உரசியதாக கூறப்படுகிறது. மது போதையில் காரில் வந்த இளைஞர்கள் சுடலை முத்துவிடம் சண்டையிட்டதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், ஆட்டோ ஒட்டுநரை இரும்பு கம்பியால் தாக்கி உள்ளனர். தொடர்ந்து இளைஞர்கள் காரை எடுத்துக்கொண்டு வேகமாக அங்கிருந்து தப்பி செல்ல முயன்ற போது, காரை எடுக்க விடாமல் ஆட்டோ ஓட்டுநர் காரின் முன்பு நின்று தடுத்த நிலையில், அதை பொருட்படுத்தாமல் இளைஞர்கள் காரை இயக்கியதில் பக்கவாட்டில் தொங்கியபடி சிறிது தூரம் ஆட்டோ ஓட்டுநரை காரில் இழுத்து சென்றனர். சிறிது தூரம் தொங்கியபடி இருந்த ஆட்டோ ஓட்டுநர் சுடலை முத்து பின்னர் காரில் இருந்து கீழே விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் அளித்தனர். அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஆட்டோ ஓட்டுநருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே காரில் தொங்கிய ஆட்டோ ஓட்டுநரை சாலையில் இழுத்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தன்னை தாக்கியவர்கள் குறித்து ஆட்டோ ஓட்டுநர் கொடுத்த புகாரின் பேரில், காரில் வந்த இளைஞர்கள் குறித்து சிங்காநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சிங்காநல்லூர் பகுதி சாலையில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு காரில் வந்தவர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...