Wednesday, February 18, 2026

அவினாசி சாலை மேம்பாலம் எடப்பாடி ஆட்சியின் சாதனை -எஸ்.பி.வேலுமணி

Must read

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

அவினாசி சாலையில் திறக்கப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு அதிமுக ஆட்சியில் முழு நிதியையும் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கியதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை அவினாசி சாலையில் ரூ.1,791 கோடி மதிப்பில் கோல்ட் வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை புதியதாக பாலம் கட்டப்பட்டது. இந்த பாலத்திற்கு ஜிடி நாயுடு பெயரிட்ட தமிழக அரசு அதனை நேற்று திறந்து வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைத்தது. இந்நிலையில், இந்த மேம்பால பணிகள் அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்டது என்பதால் இன்று உப்பிலிபாளையம் பகுதியில் அதிமுகவினர் மேளதாளம் முழங்க, வாகன ஓட்டிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே. ஆர்.ஜெயராமன் ஜமாப் இசைக்கு ஏற்ப நடனமாடி தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.
அதன் பின்னர் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் 10 கி.மீ ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் வாகனங்களில் ஊர்வலமாக சென்றனர்.உப்பிலிபாளையம் முதல் கோல்ட் வின்ஸ் வரை கட்சியினருடன் வாகனத்தில் பயணித்த எஸ்.பி.வேலு மணி, கோல்ட்வின்ஸ் பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகளை வழங்கினார். பாலத்தை பார்வையிட்ட பின்பு கோல்ட் வின்ஸ் பகுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ”50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சி, அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் கொண்டு வரப்பட்டது. போக்குவரத்து நெரிசலை குறைக்க அவினாசி சாலையில் மேம்பாலம் வேண்டுமென்று அப்போது முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்த நிலையில், அவர் முழு நிதியையும் கோவை மக்களுக்காக ஒதுக்கி தந்தார்இந்த பாலத்தின் பணிகள் அதிமுக ஆட்சியில் 55 சதவீதம் நிறைவு செய்யப்பட்டது. கொரோனா பாதிப்பு மற்றும் ஆட்சி மாற்றம் போன்றவற்றால் ஒன்றரை ஆண்டுகள் பணிகள் நின்றது. தற்போது இந்த பாலம் திறக்கப்பட்டுள்ளது.இந்த பாலத்துக்கு ஜிடி நாயுடு பெயர் சூட்டப்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சிதான். கோவைக்கு நான்கரை ஆண்டுகளாக இந்த ஆட்சியில் எதுவும் அறிவிக்கவில்லை. அதிமுக கொண்டு வந்த திட்டத்தை தான் முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். இந்த பாலத்தில் வேகத்தை கட்டுப்படுத்த கேமரா பொருத்த வேண்டும். முறையாக டைவர்சன் செய்து விபத்தில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும் என்றார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...