கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலைய பகுதியில் கடந்த (10.10.2023) அன்று நடைபெற்ற வீடு புகுந்து திருடிய வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை தனிப்படையினர் விரைந்து கைது செய்து அவர்களிடமிருந்து மேற்படி வழக்கின் சொத்துக்கள் மற்றும் 6 குற்ற வழக்குகளின் சொத்துக்களான 105.5 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.



இந்நிலையில் இத்தனிப்படையினரை
பாராட்டும் வகையில் கோவை சரக காவல்துறை துணைத் தலைவர் சரவணசுந்தர் அவர்கள் இன்று (18.10.2023) கோவை சரக காவல் அலுவலகத்தில் மேற்படி வீடு புகுந்து திருடிய வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த பெரியநாயக்கன்பாளையம் துணை காவல்கண்காணிப்பாளர் திரு.நமச்சிவாயம் அவர்கள், காவல் ஆய்வாளர் திரு.தாமோதரன் அவர்கள், காவல் உதவி ஆய்வாளர்கள்-2, காவல் சிறப்பு உதவியாளர்-2 மற்றும் காவலர்கள்-3 ஆகியோரை பாராட்டி, பணவெகுமதி மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி, வாழ்த்துக்கள் தெரிவித்தார்.


