கோவை மாவட்டம், பேரூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 2020-ஆம் ஆண்டு 05 வயது சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த ஷனூஃப் (26) என்பவர் மீது பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கின் விசாரணை கோவை மாவட்டம், போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், விசாரணை முடிவுபெற்று வழக்கின் எதிரியான சூலூர் பகுதியில் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ஷனூஃப் (26)-க்கு 11.10.2023 அன்று 3 வருட சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5000/-அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
மேலும் இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த
முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற தலைமை காவலர் திருமதி. சுதாராணி(HC 1916) ஆகியோரை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், அவர்கள் வெகுவாக பாராட்டினார்.


