பொங்கல் பண்டிகைக்கு முன்கூட்டியே டிக்கெட் முன்பதிவு செய்து கடைசி நேர நெருக்கடியை தவிர்க்க ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி ,பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்களின் வசதிக்காக 120 நாட்களுக்கு முன்பாகவே விரைவு ரயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு தொடங்கும்.
அந்த வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், 16ஆம் தேதி மாட்டுப்பொங்கல் 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, விரைவு ரயில்களில் பயணிப்பதற்கான டிக்கெட் முன்பதிவு நாளை தொடங்குகிறது.
ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் முன்பதிவு மையங்கள் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.செப்டம்பர் 13இல் முன்பதிவு செய்வோர் ஜனவரி 11ஆம் தேதியும், செப்டம்பர் 14இல் முன்பதிவு செய்வோர் ஜனவரி 12ஆம் தேதியும் பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


