Sunday, April 5, 2026

தமிழ்நாட்டில் 4 நாள் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும்; தேர்தல் அதிகாரி தகவல்

Must read

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...

ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன். அப்படிப்பட்ட எனக்கே சீட் கொடுக்கவில்லை என அவிநாசியின் சிட்டிங் எம்எல்ஏவும், முன்னாள் சபாநாயகருமான தனபால்...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிவிப்பால், 4 நாள் மட்டுமே வேட்புனுத் தாக்கல் செய்ய முடியும் என தெரியவந்துள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30-ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாள் ஏப்ரல் 6 ஆம் தேதி என்று தேர்தல் ஆணையம் ஏற்கெனவே அறிவித்துவிட்டது.

8 நாட்கள் வேட்புமனுத் தாக்கல் செய்யலாம் என்று வேட்பாளர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், வேட்பாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் விதத்தில் தேர்தல் ஆணையம் திடீரென்று இன்று (மார்ச் 25) ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், மொத்தமுள்ள 8 நாட்களில் 4 நாட்கள் விடுமுறை வருவதால் 4 நாட்கள் மட்டுமே வேட்புமனுத் தாக்கல் செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல், மார்ச் 30ஆம் தேதி தொடங்கி, கடைசி நாளான ஏப்ரல் 06ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. தினமும் காலை 11 முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம்.

மேலும், மார்ச் 31 (செவ்வாய்), ஏப்ரல் 01 (புதன்), ஏப்ரல் 03 (வெள்ளி), ஏப்ரல் 05 (ஞாயிறு) ஆகிய 4 நாட்கள் அரசின் பொது விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த 4 விடுமுறை நாட்களிலும் வேட்புமனுக்கள் பெறப்பட மாட்டாது” என்று தெரிவித்துள்ளார்.

இதனால், மார்ச் 30, ஏப்ரல் 02, ஏப்ரல் 04, ஏப்ரல் 06 ஆகிய 4 நாட்கள் மட்டுமே வேட்பாளர்கள் வேட்புமனுவை தாக்கல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். எனவே, அவசர அவசியம் கருதி, தேர்தல் ஆணையம் 4 நாள்கள் விடுமுறையை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...

ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன். அப்படிப்பட்ட எனக்கே சீட் கொடுக்கவில்லை என அவிநாசியின் சிட்டிங் எம்எல்ஏவும், முன்னாள் சபாநாயகருமான தனபால்...

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்.2) வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான...