கோயமுத்தூர் மாவட்டத்தில் 143 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பல்நோக்கு சேவை மையம் விவசாய உள்கட்டமைப்பு நிதி (MSC / AIF) திட்டத்தின் கீழ் பொருட்கள் வாங்க விருப்பம் உள்ள சங்கங்களில் மட்டுமே அமுல்படுத்த வேண்டும் என கூட்டுறவுதுறை மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது ,ஆனால் தற்போது நலிவடைந்த மற்றும் தொடர்ந்து நட்டத்தில் இயங்கும் சங்கங்களுக்கு விவசாய உபகரணங்கள் மற்றும் லாரி, டெம்போ போன்ற வாகனங்கள் வாங்குமாறு நிர்பந்திக்கப்படுகிறது ,இதனால் சங்கங்கள் மேலும் நட்டத்திற்கு உள்ளாகி நிதி நிலை பெரிதும் பாதிக்கப்படும் என்பதால் பொருட்களை வாங்க கட்டாயப்படுத்துவதினை கைவிடக்கோரி மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாக்பியா சங்கத்தை சேர்ந்த கோவை மாவட்ட செயலாளர் பால்ராஜ் தலைமையில் ,கோவை மாவட்ட தலைவர் சண்முகசுந்தரம் முன்னிலையிலும் கோவை மண்டல இணைபதிவாளர் அவர்களுக்கு மனு அளித்தனர் ,
மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட இணை பதிவாளர்களுக்கும் கோரிக்கை மனு டாக்பியா தொழிற்சங்கம் மூலம் தரப்பட்டுள்ளது ,இதில் டாக்பியா மாவட்ட பொருளாளர் துரைசாமி,மேற்கு மண்டல தலைவர் ரமணி,மற்றும் கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கடன் சங்கப் பணியாளர்கள் சுமார் 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்,
மேற்கண்ட கோரிக்கை பரிசிலித்து நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற 03/10/2023-ம் தேதியன்று ஏற்கனவே வாங்கியுள்ள உபகரணங்களை ஒப்படைத்துவிட்டு அனைத்துப் பணியாளர்களும் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக தெரிவித்தனர் .


