கோவை மாவட்டம் அன்னூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் தேவராஜன் மகள் செல்வி (48) என்பவர் தமிழ் மக்கள் சேவை மையத்தில் அரசால் வழங்கக்கூடிய அசல் மின்னணு குடும்ப அட்டையினை போன்றே மின்னணு குடும்ப அட்டை தயார் செய்து பொதுமக்களுக்கு வழங்குவதாக அளித்த புகாரின் அடிப்படையில், அன்னூர் காவல் துறையினர் போலியாக குடும்ப அட்டைகளை தயார் செய்த ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த அல்போன்ஸ் மகன் அமுல் ஆண்ட்ரூஸ்(28)என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து லேப்டாப்-1, பிரிண்டர்-1, அச்சிடப்பட்ட போலி ரேஷன் கார்டு-140 மற்றும் அச்சிடப்படாத போலி ரேஷன் கார்டு சுமார் 800-யை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
போலி ரேஷன் கார்டு தயாரித்த நபரை கைது.


