கார் டிரைவர் வங்கி கணக்கில் ரூ.9000 கோடி பற்று வைத்ததால் வங்கிக்கு இழப்பு ஏதும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது…

டிரைவர் வங்கி கணக்கில் விழுந்த ரூ.9000 கோடி பணம் இந்த செய்திதான் சோஷியல் மீடியாக்களில் தீயாய் பரவி வருகிறது. ராஜ்குமார் என்ற கார் டிரைவரின் அக்கவுண்டில் தான் இந்த 9000 கோடி விழுந்துள்ளது. பழனியை சேர்ந்த ராஜ்குமார் பிழைப்புக்காக சென்னைக்கு வந்து நண்பன் அறையில் தங்கி வாடகை கார் ஓட்டி வருகிறார். இவர் தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் அக்கவுண்ட் வைத்துள்ளார். செப்டம்பர் 9-ம் தேதி மாலை 3 மணிக்கு இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்துள்ளது. ரூ.9000 கோடி உங்க வங்கி கணக்கில் டெபாசிட் ஆகியுள்ளது என வந்துள்ளது. அக்கவுண்டில் வந்திருப்பது 9,000 கோடியா என்பதை அறிவதே முதலில் அவருக்கு பெரும் சவாலாக இருந்துள்ளது.
நம்ம அக்கவுண்டில் ரூ.15 தான் இருக்கும் நமக்கு யார் இத்தனை கோடி போடப்போறாங்க. யாரோ நம்மை ஏமாற்ற இப்படி மெசேஜ் அனுப்பியிருக்காங்க. இது ஒரு மோசடி மெசேஜ் என்று தான் முதலில் நினைத்துள்ளார். அதன்பின் போன் ஆப்பில் செக் செய்தபோது அக்கவுண்டில் இவ்வளவு பெரிய தொகை இருப்பதை கண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளார். இது உண்மை தானா என சோதிக்க தனது நண்பன் வங்கி கணக்குக்கு ரூ. 21,000 அனுப்பியுள்ளார். இந்த பணப்பரிவர்த்தனை நடந்த சிறிது நேரத்தில் வங்கியானது மீதமுள்ள பணம் அனைத்தையும் திரும்ப பெற்றுள்ளது.
இதனையடுத்து தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் தலைமையை அலுவலத்தில் இருந்து ராஜ்குமாருக்கு போன் செய்துள்ளனர். தவறுதலாக ரூ.9000 கோடியை உங்க அக்கவுண்டில் டெபாசிட் செய்துவிட்டோம். நீங்க ஷேர் செய்த பணத்தை செலவு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளனர். மேலும் சென்னையில் உள்ள கிளை அலுவலகத்துக்கு அவரை நேரில் வருமாறு அழைத்துள்ளனர். இவ்வளவு பெரிய தொகை என் அக்கவுண்டுக்கு வந்துள்ளது. இதனால் எனக்கு பிரச்னை எதாவது வந்துவிடும் நான் எதற்கும் காவல்நிலையத்தில் ஒரு புகாரை பதிவு செய்துவிடுகிறேன் என கூறியுள்ளார்.


