Monday, August 24, 2026

ஓட்டுக்கு ₹5000… எல்லாம் கொள்ளை அடித்த பணம்  இறுதி கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் கோவை வடக்கு வேட்பாளர் வானதி ஆவேச பேச்சு !

Must read

வருகையில்லா ஆவணப்பதிவு, பதிவுத்துறையில் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்…

தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம்...

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு – புதிய நிர்வாகிகள் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் 16-வது தேசிய தலைவராக கடந்த ஜனவரி மாதத்தில் நிதின் நவீன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிலிருந்தே கட்சியின் நிர்வாகிகளை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில்,...

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க பேரவையில் தீர்மானம் – எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு…

மக்களவைத் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்த மசோதா விவகாரம் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.08) மாலை 05.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய்...

கோவையை ரவுடிகளிடம் அடகு வைக்காதீர்கள்  செந்தில் பாலாஜிக்கு செவாலியே விருது கொடுக்கலாம் – கோவை இறுதி கட்டப் பிரச்சாரத்தில் எம்.எல்.ஏ வானதி கிண்டல் !

கோவை வடக்குத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் இன்று வடவள்ளி பகுதியில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

பிரச்சாரத்தின் போது தொண்டர்கள் மத்தியில் அவர் பேசியதாவது

பா.ஜ.க வில் வெளி மாவட்டங்களில் இருந்து கூட இங்கு வந்து தேர்தல் களப்பணி ஆற்றிக் கொண்டு இருக்கின்றனர்.

தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டுமென்றால் ஒரே ஒரு வழி தான் உள்ளது. அதற்கு அ.தி.மு.க.வும், பா.ஜ.க வும் கைகோர்த்தாக வேண்டும் என்று மோடியும், அமித்ஷாவும் முடிவெடுத்தார்கள்.

கோவை என்பது தே.ஜ கூட்டணியின் பக்கம் என்பதை கடந்த தேர்தலில் காட்டினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தி.மு.க ஆட்சிக்கு வந்தது.

உள்ளாட்சித் துறை அமைச்சராக எஸ்.பி. வேலுமணி இருந்த போது மாதத்திற்கு மூன்று முறை டெல்லிக்கு செல்வார். எதற்காகவென்றால் முதலில் விருதுகள் வாங்கவும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்களை சந்தித்து திட்டங்களைக் கேட்கவும் செல்வார்.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து சிறப்பான திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு இருந்த காலம் இருந்தது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் 1500 கோடி ரூபாய் கோவைக்கு கிடைக்கப்பெற்றது. ஏழு குளங்கள் இந்த திட்டத்தில் புனரமைக்கப்பட்டன.

வேலைவாய்ப்பை அதிகரிக்கும் வகையில் ராணுவ தளவாட மையத்தை கோவை, சேலம், ஓசூர் வரை நீட்டித்துக் கொடுத்தார் மோடி.

உத்தரப்பிரதேசம் மற்றும் தமிழ்நாட்டில் தான் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. இன்று உத்தரப்பிரதேசத்தில் ராணுவ தளவாட உற்பத்தி அதிகரித்து உள்ளது. ஆனால் தி.மு.க ஆட்சியில் இங்கு அந்த திட்டம் பாதாளத்திற்கு சென்று விட்டது.

நாம் முக்கிய கட்டத்தில் இருக்கிறோம். உலக தலைவர்கள் பிரதமர் மோடி எங்கள் நாட்டிற்கு வரமாட்டாரா ? என்று ஏங்குகின்றனர்.

நாம் பெட்ரோல், டீசல், கேஸுக்காக காத்து இருக்கவில்லை. மோடி நம்மை கண் இமை போல் காத்துக் கொண்டு இருக்கிறார். அப்படிப்பட்ட மோடியை கோ பேக் என்று சொல்லியும் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வந்தால், எப்படி மோடி கொடுக்கும் திட்டங்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருவார்கள்.

ரம்ஜான், கிறிஸ்துமஸ்க்கு வாழ்த்து சொல்லும் ஸ்டாலின் விநாயகர் சதுர்த்திக்கும், தீபாவளிக்கும் வாழ்த்து சொல்கிறாரா ? இந்துக்களுக்கு விரோதமான கட்சி தி.மு.க.

கோவில் குறித்தோ, சாமிகள் குறித்தோ ? உயர்வாக பேசியிருக்கிறார்களா ? ஓட்டுக்காக இப்போது ஸ்டாலின் நாடகம் போடுகிறார்.

பா ஜ.க வை பார்த்தால் அவருக்கு பயம்.
பெண்கள் பாதுகாப்பு மோசமாக உள்ளது. பகல் நேரத்தில் கூட பெண்கள் நடமாட முடியவில்லை. பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இருக்கின்றன என்று யாராவது சொல்ல முடியுமா ?

தி.மு.க அரசு தூக்கி எறியப்படா விட்டால் நாம் வீட்டை விட்டு வெளியே போக முடியாது.

சாக்லேட், ஊசி என்று பல வடிவங்களில் போதைப் பொருட்கள் அதிகரித்து உள்ளன.

தடுப்பூசியைக் கூட ஸ்டாலின் அரசு அனுப்பவில்லை. கோவையை பழி வாங்குகிறார்.

அ.தி.மு.க. ஆட்சி இருக்கும் போது மட்டும் தான் பாதுகாப்பாக தொழில் செய்ய முடியும். கடந்த இரண்டு நாட்களாக ஆயுதம் ஏந்திய கும்பல்கள் வீடுகள் மற்றும் தெருக்களில் அமர்ந்து இருக்கிறார்கள்.

ஒரு ஓட்டுக்கு ரூ.2,500, ரூ.5,000 என்று கொடுக்கிறார்கள். ஸ்டாலின் அடித்த கொள்ளைப் பணம் தான் இது.

5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வருவது தான் தேர்தல், ஆனால் ஓட்டுப்போட 5 நொடிகள் போதும். யோசித்து ஓட்டுப்போடுங்கள்.

கோவை மாநகராட்சி கவுன்சிலர்கள் யாரும் வேலை செய்வதில்லை. அந்த தேர்தலுக்கு வெள்ளிக் கொலுசு கொடுத்தார். அது மூன்றே மாதத்தில் பல் இளித்து விட்டது. எத்தனை கோடி கொட்டிக் கொடுத்தாலும் இங்கு மலரப் போவது தாமரையும், இரட்டை இலையும் தான் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

உத்தமபுத்திரனாக பார்த்து செந்தில் பாலாஜியை ஸ்டாலின் இங்கு அனுப்பி உள்ளார்.

நம்மை நம் வீட்டில் கூட நிம்மதியாக வாழ விடமாட்டார்கள். எஸ்.பி. வேலுமணி மேம்பாலங்கள் கட்டினார். திட்டங்களைக் கொண்டு வந்தார். ஆனால் ஸ்டாலின் ஸ்டிக்கர் மட்டும் ஒட்டினார்.

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் மட்டும் பல்வேறு திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டு உள்ளன.

இங்கிருக்கும் மாநகராட்சி கவுன்சிலர்கள் செந்தில் பாலாஜியின் கலெக்‌ஷன் ஏஜெண்டுகளாக உள்ளனர். அதையே இந்த தேர்தலில் செய்யப்பார்க்கிறார். எனவே அனைவரும் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள் என்று வானதி சீனிவாசன் பேசினார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

வருகையில்லா ஆவணப்பதிவு, பதிவுத்துறையில் புதிய திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்…

தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில், பொதுமக்கள் தாங்களே நேரடியாக இணையவழியில் ஆவணங்களைப் பதிவு செய்யும் முறையினை பதிவுத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆவணப்பதிவு முறையின் மூலம்...

பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் பொறுப்பிலிருந்து வானதி சீனிவாசன் விடுவிப்பு – புதிய நிர்வாகிகள் நியமனம்

பாரதிய ஜனதா கட்சியின் 16-வது தேசிய தலைவராக கடந்த ஜனவரி மாதத்தில் நிதின் நவீன் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதிலிருந்தே கட்சியின் நிர்வாகிகளை மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. இந்நிலையில்,...

கொசு மருந்து அடித்த 1 மணி நேரத்தில் மூச்சு திணறி உயிரிழந்த முதியவர்கள்..!

அன்னூர் பகுதியில் குறைவான தண்ணீரில் அதிக கொசு மருந்தை கலந்து குடியிருப்பு பகுதிக்குள் பணியாளர்கள் அடித்ததாக கூறி அப்பகுதி மக்கள் வாக்குவாதம். கோவை மாவட்டம், அன்னூர்...

தொகுதி மறுவரையறையில் தமிழகத்தின் உரிமையை பாதுகாக்க பேரவையில் தீர்மானம் – எம்.பி.க்கள் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு…

மக்களவைத் தொகுதி மறுவரையறைச் சட்டத் திருத்த மசோதா விவகாரம் குறித்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஆக.08) மாலை 05.00 மணிக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முதலமைச்சருமான விஜய்...

பேருந்தில் கல்லூரி மாணவிக்குப் பாலியல் தொல்லை – கோவை போலீஸ் கைது!

​கோவை, பொள்ளாச்சியில் இருந்து கோவை வந்த பேருந்தில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த குற்றத்திற்காகப் போத்தனூர் காவல் ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த காவலர் மணிவேந்தன் கைது...