Saturday, April 4, 2026

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்

Must read

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...

ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன். அப்படிப்பட்ட எனக்கே சீட் கொடுக்கவில்லை என அவிநாசியின் சிட்டிங் எம்எல்ஏவும், முன்னாள் சபாநாயகருமான தனபால்...

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்.2) வேட்புமனு தாக்கல் செய்தார்.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு, ஒரே கட்டமாக வரும் 23 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் அரசியல் கட்சி தலைவர்கள், தங்களது வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மற்றொருபுறம், தேர்தலை நேர்மையாகவும், 100 சதவீதம் வாக்குப்பதிவு என்ற இலக்கை அடையும் வகையிலும் தேர்தல் ஆணையம் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தேர்தல் பறக்கும் படையினர் மற்றும் நிலையான கண்காணிப்புக் குழு அதிகாரிகள், தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் வாகனத் தணிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில், வேட்பு மனுத்தாக்கலுக்கான கடைசி தேதி ஏப்ரல் 6- ஆம் தேதி என்பதால், வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகின்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் பரபரப்பாக காணப்படுகின்றன.இந்நிலையில், திமுகவின் இளைஞரணிச் செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 02) சென்னை ஐஸ் ஹவுஸ் அருகே பெசன்ட் சாலையில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரி ஆர்.சுகந்தியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.இந்நிகழ்வின் போது, மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், அண்ணா நகர் திமுக வேட்பாளர் சிற்றரசு, திமுக மாநில ஊடகப்பிரிவு இணைச்செயலாளர் வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “இது ஒரு வரலாறு வெற்றியாக இருக்கும். கண்டிப்பாக இந்த முறையும் வெற்றி பெறுவோம்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி ஒரு பார்வை

கடந்த 2008- ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்புக்குப்பின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி உருவானது. மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தொடர்ந்து மூன்று முறை போட்டியிட்டு சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல், கடந்த 2011 மற்றும் 2016 சட்டமன்றத் தேர்தல்களில் சேப்பாக்கம் தொகுதியில் மறைந்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்தார். அதைத் தொடர்ந்து, கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சரானார். இந்நிலையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின், இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...

ஆட்சியை நான்தான் காப்பாற்றிக் கொடுத்தேன்! எனக்கே சீட் இல்லை! தனபால்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு பிறகு நான்தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சியை காப்பாற்றி கொடுத்தேன். அப்படிப்பட்ட எனக்கே சீட் கொடுக்கவில்லை என அவிநாசியின் சிட்டிங் எம்எல்ஏவும், முன்னாள் சபாநாயகருமான தனபால்...

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல்

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (ஏப்.2) வேட்புமனு தாக்கல் செய்தார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான...