Saturday, April 11, 2026

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படுமா? திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை

Must read

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

திமுக தலைமையகமாக சென்னை அண்ணா அறிவாலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 16) நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யப்படுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் மற்றும் பிரச்சாரத்திற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில், ஆளும் கட்சியான திமுக தேர்தல் பணிகள், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (மார்ச் 16) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையிலும், பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணை பொது செயலாளர்கள் கனிமொழி, பொன்முடி, ஆ.ராசா, ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயளாலர் ஆர்.எஸ் பாரதி, அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு முழுவதும் இருந்து 77 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு, 133 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அதிகப்படியான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கட்சி பாகுபாடு இன்றி தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது தொடர்பான அறிவுரைகள் இந்த கூட்டத்தின் வாயிலாக வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் உடன் மு.க.ஸ்டாலின் உரையாற்றி, மாவட்ட செயலாளர்களின் நிறை குறைகளையும் கேட்டறிய உள்ளார்.நாளை முதல் நேர்காணல்

இதனிடையே, நாளை முதல் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு வழங்கியவர்களுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது. மேலும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் தொடர்பாக எத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும்.

கூட்டணி தொகுதி பங்கீடு

குறிப்பாக திமுகவின் கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு இதுவரை இறுதி ஆகாத சூழலில், இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு முழுவதுமாக இறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நலம் தேறி இன்றைய தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...