Sunday, September 13, 2026

கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படுமா? திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஆலோசனை

Must read

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திமுக தலைமையகமாக சென்னை அண்ணா அறிவாலையத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று (மார்ச் 16) நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யப்படுவது குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2026 சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள சூழலில், அனைத்து கட்சிகளும் தேர்தல் மற்றும் பிரச்சாரத்திற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. அந்த வகையில், ஆளும் கட்சியான திமுக தேர்தல் பணிகள், தேர்தல் பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று (மார்ச் 16) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.

தலைவர் மு.க ஸ்டாலின் தலைமையிலும், பொதுச்செயலாளர் துரைமுருகன் முன்னிலையில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பொருளாளர் டி.ஆர். பாலு, முதன்மைச் செயலாளர் கே.என். நேரு, துணை பொது செயலாளர்கள் கனிமொழி, பொன்முடி, ஆ.ராசா, ஐ.பெரியசாமி, திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ், அமைப்பு செயளாலர் ஆர்.எஸ் பாரதி, அமைச்சர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமிழ்நாடு முழுவதும் இருந்து 77 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக 173 இடங்களில் போட்டியிட்டு, 133 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. வரும் சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் அதிகப்படியான தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், அனைத்து மாவட்டச் செயலாளர்கள் கட்சி பாகுபாடு இன்றி தேர்தல் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது தொடர்பான அறிவுரைகள் இந்த கூட்டத்தின் வாயிலாக வழங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் உடன் மு.க.ஸ்டாலின் உரையாற்றி, மாவட்ட செயலாளர்களின் நிறை குறைகளையும் கேட்டறிய உள்ளார்.நாளை முதல் நேர்காணல்

இதனிடையே, நாளை முதல் திமுக சார்பில் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பமனு வழங்கியவர்களுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது. மேலும், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு இன்னும் 15 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் தொடர்பாக எத்தகைய பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது தொடர்பான முக்கிய முடிவுகள் இந்த கூட்டத்தில் எடுக்கப்படும்.

கூட்டணி தொகுதி பங்கீடு

குறிப்பாக திமுகவின் கூட்டணி உடன்பாடு மற்றும் தொகுதி பங்கீடு இதுவரை இறுதி ஆகாத சூழலில், இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிப்பங்கீடு முழுவதுமாக இறுதி செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் உடல்நல குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், உடல்நலம் தேறி இன்றைய தினம் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

ரூ.7 லட்சம் லஞ்சம்; சார்பதிவாளர் உட்பட இருவர் கைது

கவுந்தப்பாடி பத்திரப்பதிவு அலுவலகத்தில் நிலத்தை பதிவு செய்ய ரூ.7 லட்சம் லஞ்சம் கேட்பதாக எழுந்த புகாரின் பேரில், ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கையில் கவுந்தப்பாடி சார்பதிவாளர்...

மதுபானக் கூட உரிமையாளர்களுக்கு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை..

கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட FL-2 மற்றும் FL-3 மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகப் பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம், கோவை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்...

கோவையில் உணவகத்திற்கு சீல்; 12 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் விதிமுறைகளைப் பின்பற்றாத உணவகத்திற்கு FSSAI சீல் வைத்துள்ளது, மேலும் 12 உணவகங்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின்போது, இந்திய...

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு அக்.6 இல் இடைத்தேர்தல்…

தமிழ்நாட்டில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

திடக்கழிவு மேலாண்மை திட்டம் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

கோவை கூடலூர் நகராட்சியில் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ள திடக்கழிவு மேலாண்மை திட்டம் புதிய விதிகளின்படி, வீடுகள், நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கழிவு உருவாக்குபவர்களும் குப்பைகளை உருவாகும் இடத்திலேயே நான்கு வகைகளாகப்...