Friday, July 24, 2026

7 மணி நேர விசாரணைக்கு பிறகு வெளியே வந்த விஜய்… டெல்லியில் “ரோடு ஷோ”

Must read

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

சிபிஐ அலுவலகத்தில் இருந்து வெளியே வந்த விஜய் சாலையோரம் கூடியிருந்த தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு காரில் நின்றபடி சிரித்த முகத்துடன் கையசைத்து சென்றார்.

கரூரில் கடந்த செப். 27 ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரை மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்ட நிலையில், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வருகிறது. முன்னதாக, கரூர் சம்பவம் குறித்த விசாரணைக்கு ஆஜராக தவெக நிர்வாகிகள் ஆதவ் அர்ஜுனா, ஆனந்த் உள்ளிட்டோருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி இருந்தது.

அதன்பேரில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தவெக தலைவர் விஜய்க்கும் சிபிஐ சம்மன் அனுப்பியது. அதன்படி, கடந்த ஜனவரி மாதம் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நடைப்பெற்ற விசாரணைக்கு இரு முறை விஜய் ஆஜராகி இருந்தார். இந்த நிலையில், கடந்த மார்ச் 9 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராக விஜய்க்கு மூன்றாவது முறையாக சிபிஐ சம்மன் அனுப்பியது.அதற்கு விஜய் தரப்பில் இருந்து விசாரணையை 15 நாட்களுக்கு தள்ளி வைக்குமாறும், தேர்தல் பணிகள் காரணமாக விசாரணையை தமிழ்நாட்டில் ஏதேனும் ஒரு அலுவலகத்தில் நடத்திடுமாறும் வலியுறுத்தப்பட்டது. ஆனால், அந்த கோரிக்கைகளை சிபிஐ நிராகரித்துவிட்டது. இதனை தொடர்ந்து சிபிஐ சம்மன் படி, விஜய் இன்று காலை 10 மணி அளவில் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார். அதிகாரிகள் அவரிடம் சுமார் 7 மணி நேரம் வரை விசாரணை நடத்தி உள்ளனர். இதன்பின் மாலை 6 மணி அளவில் சிபிஐ அலுவலகத்தில் இருந்து விஜய் வெளியே வந்தார். அப்போது அலுவலகத்தின் வெளியே காத்திருந்த தவெக தொண்டர்கள் மற்றும் ரசிகர்களுக்கு காரில் நின்றபடி சிரித்த முகத்துடன் கையசைத்து சென்றார். அது தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

மேலும், கரூர் விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராக, கரூர் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. வரும் மார்ச் 17 ஆம் தேதி அவரும் டெல்லிக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில் இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய செந்தில் பாலாஜி, ” கரூரில் பாதிக்கப்பட்ட மக்களை மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்த்து ஆறுதல் கூறினேன். என்னை போல மற்ற அரசியல் கட்சித் தலைவர்களும் அங்கு வந்திருந்தனர். அவர்களுக்கும் சிபிஐ சம்மன் அனுப்புமா? விசாரணை முறையாக நடக்கின்றது என்றால் மருத்துவமனையில் மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய அனைவருக்கும் சிபிஐ சம்மன் வழங்கியிருக்க வேண்டுமே?” என கேள்வி எழுப்பியிருந்தார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பழநியில் ரூ.100 கோடி நிலம் முறைகேடு: நிலம் விற்றவர், வாங்கியோர் தலைமறைவுசிபிசிஐடி தீவிர தேடுதல் வேட்டை

பழநியில் ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் சட்டவிரோதமாகப் பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு பயந்து நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் என 3 பேர் தலைமறைவாகினர். அவர்களைத் தேடும் பணியை...

டிஜிட்டல் லஞ்சம்,கோவை வடக்கு தாலுகா அலுவலகத்தில் ‘ரெய்டு’ 

லஞ்சப் பணத்தைக் கண்டுபிடிக்க அதிகாரிகளின் ஆன்லைன் கணக்குகளை டிராக்கிங் செய்த போலீசார், ₹5,000 ரொக்கமும் பறிமுதல், விடிய, விடிய நடந்த விசாரணை !!! தமிழ்நாடு முழுவதும்...

கோவையில் அடகு கார் விவகாரத்தில் ₹70 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காட்டூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி கைது.

திருநெல்வேலி அருகே உள்ள மேலக்கரையை சேர்ந்தவர் ருஜைனா பாத்திமா. இவருடைய கணவர் புதிய கார் வாங்கியுள்ளார். பண பிரச்சினைக்காக அந்த காரை ரவிக்குமார் என்பவரிடம் அடமானம் வைத்தாக தெரிகிறது. அந்த...

2 வருஷ படிப்பை இழுத்தடிக்கும் நிர்வாகம்; புத்தகம் இல்லை, வகுப்பும் இல்லை, ஆனால் அபராதம் மட்டும் ₹300 வசூலிப்பதா ? என மாணவர்கள் கடும் கொதிப்பு !!!

கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் தொலைதூரக் கல்வி முறையில் பல்வேறு முதுகலை படிப்புகளில் படித்து வருகின்றனர் . ஏற்கனவே இரண்டு வருடங்களில் முடிக்க வேண்டிய படிப்பை,...

கரூரில் 3,084 ஏக்கர் இனாம் நிலங்கள் யாருடைய பெயரில் உள்ளன?

கரூர் மாவட்ட 3,084.95 ஏக்கர் இனாம் நிலங்கள் குறித்த வழக்கில் சம்பந்தப்பட்ட நிலம் யாருடைய பெயரில் உள்ளன என்று உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது. இனாம் நிலங்களுக்கு பதிவுத்துறை...