Monday, May 25, 2026

தமிழ்நாட்டின் முதல் வன விலங்கு சிறப்பு சிகிச்சை மறுவாழ்வு மையம் – திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Must read

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

கோவை மாவட்டம், வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியக வளாகத்தில், தமிழ்நாடு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டனர். முன்னதாக, வனத்துறைக்காக புதிதாக வாங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை அவர் பார்வையிட்டார். பணியின்போது உயிர் நீத்த வனத்துறையினருக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் கோவையில் தமிழ்நாடு வனப்படை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 123 துப்பாக்கிகள், 19 பிஸ்டல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வனத்துறைக்கு வழங்கினார். மேலும், கோவை மாவட்டம் சிறுமுகை பெத்திக்குட்டை பகுதியில் ரூ.19.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இது தமிழ்நாட்டில் வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட முதல் சிறப்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையமாகும். அதேபோல், ரூ.8 கோடி மதிப்பீட்டில் கோவை சாடிவயல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை முகாம் மற்றும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட மின்னணு ஆவண காப்பக சேமிப்பகத்தையும் அவர் திறந்து வைத்தார். இந்த மின்னணு ஆவண காப்பகத்தின் மூலம் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆவணங்களை பார்வையிட முடியும்.

இந்த நிகழ்வை தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.31.72 கோடி மதிப்பீட்டிலான 12 புதிய திட்டப்பணிகளுக்கு துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் உட்பட ரூ.162.52 கோடி மதிப்பீட்டில் 107 முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதையடுத்து 10,626 பயனாளிகளுக்கு ரூ.136.45 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.முன்னதாக விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கோவைக்கு புத்தாண்டு பரிசாக ரூ.10 கோடி மதிப்பில் புதிய ஹாக்கி மைதானம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இனி சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் இங்கும் நடைபெறும். SIHS காலனியில் உயர் மட்ட ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு 2010 ஆம் ஆண்டு கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது ஆனால், அதிமுக ஆட்சியில் அதனை கிடப்பில் போட்டுவிட்ட நிலையில், தற்போது மீண்டும் அந்த மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...

கேரளா முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவியேற்பு; அமைச்சரவையில் 2 பெண் உறுப்பினர்கள்…

கேரளம் சட்டப்பேரவைக்கான தேர்தலில், காங்கிரஸ் கட்சி பெருவாரியான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் அதிகாரத்தை பெற்றது. பத்து வருடங்கள் கழித்து ஆட்சி பொறுப்பேற்க தயாராக இருந்த காங்கிரஸ் கட்சியில் இருந்து,...