Monday, May 25, 2026

திமுக – பாஜக இடையே கள்ளக் கூட்டணி… விஜய் ஆவேசம்

Must read

தென்காசி சோதனைச்சாவடியில் அமைச்சர் அதிகாலையில் அதிரடி ஆய்வு..!

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான...

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, ‘உங்க விஜய் நா வரேன்’ எனும் பெயரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 13 ஆம் தேதி தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.20) நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அங்கு பேசிய விஜய், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குடும்பத்தை வைத்து தமிழ்நாட்டை கொள்ளையடித்து வருகிறார் என்று கூறினார்.

இந்நிலையில், இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தனது பரப்புரையை விஜய் மேற்கொண்டார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் நாமக்கல் வந்தடைந்தார். இந்நிலையில், நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் அருகில் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணாக நாமக்கல் இருந்து வருகிறது. அந்த மண்ணில் இருந்து பேசுவதை பெருமையாக கருதுகிறேன். நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தியாகும் முட்டைகளை சேமிக்க பாதுகாப்பான கிடங்கு ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதை இப்போது ஆளுகின்ற அரசு செய்ததா? திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் ஏழை எளிய மக்களின் கிட்னி திருடப்படுகிறது. இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தவெக ஆட்சி அமைந்ததும் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், “மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தவெக ஆட்சியில் செய்து கொடுப்போம் என்று கூறினால், புதிதாக ஏதாவது கூறுங்கள் என அரசியல் விஞ்ஞானிகள் கேட்கிறார்கள். புதிதாக என்றால் என்ன? வீட்டில் அனைவரும் விமானம் ஓட்ட வைப்போம் என்று கூறலாமா? அல்லது அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை அமைப்போம் என்று கூறலாமா? என்றும் கேள்வி எழுப்பினார். அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக பேசிய விஜய், “மூச்சுக்கு 300 முறை அம்மா, அம்மா என்று கூறுபவர்கள் ஜெயலலிதா மேடம் சொன்னதை எல்லாம் மறந்துவிட்டு, பொருந்தா கூட்டணியை அமைச்சுகிட்டு, தமிழ்நாட்டு நலனுக்காக கூட்டணி என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்களை போல தவெக எப்போதும் இருக்காது” என்றார்.
திமுக, பாஜக தொடர்பாக பேசிய அவர், “பாஜக – திமுக இடையே மறைமுக உறவு உள்ளது. திமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பது போன்றதுதான். மோசமான ஆட்சியை தமிழகத்தில் கொடுக்கும் இந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? இல்லை நம்முடைய தவெக ஆட்சி வேண்டுமா? மக்கள் நீங்கள் தான் அதை சொல்ல வேண்டும். என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். வரும் தேர்தலில் நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என்றார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தென்காசி சோதனைச்சாவடியில் அமைச்சர் அதிகாலையில் அதிரடி ஆய்வு..!

தென்காசி மாவட்டம், புளியரை சோதனைச்சாவடி வழியாக தினந்தோறும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்களில், நெல்லை மாவட்டம் ராதாபுரம், தென்காசி மாவட்டம் ஆலங்குளம் போன்ற பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் அண்டை மாநிலமான...

குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – கோவையில் அமைச்சர் சம்பத்குமார் பேட்டி

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த...

கோவையில் 10 வயது சிறுமி கொலை, குற்றவாளிகள் இருவர் கைது…

கோவை மாவட்டம், சூலூர் காவல் பள்ளபாளையம் பகுதியில் வசிக்கும் 10 வயது பெண் நேற்று முன்தினம் (மே 21) மாலை வீட்டிற்கு அருகிலிருந்த கடைக்குச் சென்றுள்ளார். வெகு நேரமாகியும் சிறுமி...

மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை… இருவர் கைது

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 35 வயதான வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண். திருமணமாகாத இவர் தனியார் அரிசி ஆலையில் வேலை பார்த்து...

13 வயது சிறுவனை மது பாட்டிலில் அடித்துக் கொன்ற சக நண்பர்கள்…

கோவை மாவட்டம், இருகூர் பகுதியைச் சேர்ந்தவர் பாரதிராஜா தூய்மைப் பணியாளராகப் பணியாற்றி வருகிறார். இவருடைய மூத்த மகன் ரித்தீஷ் (13), கடந்த மே 15- ஆம் தேதி மாலை திடீரென...