Thursday, February 19, 2026

திமுக – பாஜக இடையே கள்ளக் கூட்டணி… விஜய் ஆவேசம்

Must read

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

2026 சட்டமன்றத் தேர்தலையொட்டி, ‘உங்க விஜய் நா வரேன்’ எனும் பெயரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் பிரச்சார சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 13 ஆம் தேதி தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், திருச்சி, அரியலூர் மாவட்டங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். தொடர்ந்து கடந்த வாரம் சனிக்கிழமை (செப்.20) நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அங்கு பேசிய விஜய், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். குடும்பத்தை வைத்து தமிழ்நாட்டை கொள்ளையடித்து வருகிறார் என்று கூறினார்.

இந்நிலையில், இன்று நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தனது பரப்புரையை விஜய் மேற்கொண்டார். இதற்காக இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் திருச்சி வந்த அவர், அங்கிருந்து கார் மூலம் நாமக்கல் வந்தடைந்தார். இந்நிலையில், நாமக்கல் கே.எஸ்.திரையரங்கம் அருகில் தொண்டர்களிடையே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “தமிழக மக்களுக்கு உணர்ச்சியூட்டும் மண்ணாக நாமக்கல் இருந்து வருகிறது. அந்த மண்ணில் இருந்து பேசுவதை பெருமையாக கருதுகிறேன். நாமக்கல் மாவட்டத்தில் உற்பத்தியாகும் முட்டைகளை சேமிக்க பாதுகாப்பான கிடங்கு ஏற்படுத்த வேண்டும் என்பது இந்த மாவட்ட மக்களின் முக்கிய கோரிக்கையாக உள்ளது. இதை இப்போது ஆளுகின்ற அரசு செய்ததா? திமுக எம்எல்ஏவுக்கு சொந்தமான மருத்துவமனையில் ஏழை எளிய மக்களின் கிட்னி திருடப்படுகிறது. இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் அனைவரும் தவெக ஆட்சி அமைந்ததும் தண்டிக்கப்படுவார்கள்” என்றார்.தொடர்ந்து பேசிய தவெக தலைவர் விஜய், “மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை தவெக ஆட்சியில் செய்து கொடுப்போம் என்று கூறினால், புதிதாக ஏதாவது கூறுங்கள் என அரசியல் விஞ்ஞானிகள் கேட்கிறார்கள். புதிதாக என்றால் என்ன? வீட்டில் அனைவரும் விமானம் ஓட்ட வைப்போம் என்று கூறலாமா? அல்லது அமெரிக்காவுக்கு ஒத்தையடி பாதை அமைப்போம் என்று கூறலாமா? என்றும் கேள்வி எழுப்பினார். அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக பேசிய விஜய், “மூச்சுக்கு 300 முறை அம்மா, அம்மா என்று கூறுபவர்கள் ஜெயலலிதா மேடம் சொன்னதை எல்லாம் மறந்துவிட்டு, பொருந்தா கூட்டணியை அமைச்சுகிட்டு, தமிழ்நாட்டு நலனுக்காக கூட்டணி என்று மக்களை ஏமாற்றுகிறார்கள். அவர்களை போல தவெக எப்போதும் இருக்காது” என்றார்.
திமுக, பாஜக தொடர்பாக பேசிய அவர், “பாஜக – திமுக இடையே மறைமுக உறவு உள்ளது. திமுகவுக்கு வாக்களிப்பது பாஜகவுக்கு வாக்களிப்பது போன்றதுதான். மோசமான ஆட்சியை தமிழகத்தில் கொடுக்கும் இந்த திமுக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா? இல்லை நம்முடைய தவெக ஆட்சி வேண்டுமா? மக்கள் நீங்கள் தான் அதை சொல்ல வேண்டும். என் மீது நீங்கள் வைத்துள்ள நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன். வரும் தேர்தலில் நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம்” என்றார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...