தன்னுடைய வீட்டில் வெள்ளம் புகுந்துள்ளதாகவும் காரப்பாக்கம் பகுதியில் நீரின் அளவு மோசமாக அதிகரித்து வருவதாகவும் நடிகர் விஷ்ணு விஷால் இன்று காலை X தளத்தில் பதிவிட்டிருந்த நிலையில் தற்போது அவரை தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் மீட்டுள்ளனர்.
இதில் ஆச்சிரியம் பிரபல பாலிவுட் நடிகர் அமீர் கானும் சேர்த்து மீட்கப்பட்டுள்ளார். தனிப்பட்ட வேலைகளுக்காக சென்னை வந்துள்ள அமீர் கான் வெள்ளத்தில் சிக்கியுள்ளார். தீயணைப்புத் துறையினர் மற்றும் தமிழக அரசுக்கு விஷ்ணு விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.


