சென்னை ராயப்பேட்டை ஜிபி சாலை அருகே முட்டளவு மழைநீர் தேங்கியுள்ள சாலையில் நடந்து சென்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். அப்போது அங்கு மழை நீர் வடிவதற்கான பணிகளை கேட்டறிந்த உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து மழைநீர் வடிவதற்கான பணிகளை விரைவுபடுத்த மாநகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். தொடர்ந்து அங்கிருந்த மக்களுக்கு சிற்றுண்டி வழங்கினார்.



