நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பான விசாரணைக்கு சீமான் நேரில் ஆஜராகவில்லை…

சீமான் தன்னை திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாகவும், 7 முறை கருக்கலைப்பு செய்ய தூண்டியதாகவும் அவர் மீது, காவல்நிலையத்தில் விஜயலட்சுமி புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியிடம் 8 மணிநேரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர், திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.மேலும், கருக்கலைப்பு குற்றச்சாட்டு தொடர்பாக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் விஜயலட்சுமிக்கு மருத்துவ பரிசோதனையும் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து சீமான் விசாரணைக்காக கடந்த 9 ஆம் தேதி நேரில் ஆஜராக சென்னை வளசரவாக்கம் காவல்துறையினர் சம்மன் அனுப்பினர். ஆனால், அன்றைய தினம் ஈரோடு சென்றதால் இன்று ஆஜராவதாக சீமான் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் இன்று காலை 10 மணிக்கு ஆஜராவார் என கூறப்பட்டது.இந்நிலையில் சீமானுக்கு பதிலாக அவரது வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சங்கர் , “விஜயலட்சுமி என்ற பெண் அளித்த புகாரில் 1007/2011 வழக்கில் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு சீமானுக்கு சம்மன் அளித்திருந்தனர்.
சில பல காரணங்களால் அவர் இன்று ஆஜராகவில்லை. அவருக்கு பதில் நாங்கள் ஆஜராகியுள்ளோம். இரண்டு கடிதங்கள் கொடுத்து அனுப்பியுள்ளார்.


