ஒரே நேரத்தில் கோயம்பேட்டில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக பேருந்துகள் இயக்கப்பட்டதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

விடுமுறையோ அல்லது விழாக்காலமோ எதுவாக இருந்தாலும் சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த ஊர்ககளுக்கு செல்வது வழக்கம், இதன் காரணமாக விடுமுறை, பண்டிகை என்றாலே கோயம்பேடு பேருந்து நிலையம் மக்கள் வெள்ளத்தால் ஸ்தம்பித்து போகும். ஊர்களுக்கு செல்பவர்கள் கூட்டம் கூட்டமாக கோயம்பேடைநோக்கி செல்வதால் பெரும் போக்குவரத்து நெரிசல் ஒவ்வொரு முறையும் ஏற்பட்டு வருவது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
அவ்வாறு வரும் சனி, ஞாயிறு மற்றும் விநாயகர் சதுர்த்தி என அடுத்தடுத்து விடுமுறை வருவதால், சென்னையில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. பயணிகளின் வசதிகளுக்காக, சென்னை கோயம்பேட்டில் இருந்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அதிகளவு இயக்கப்பட்டன.


