arr4chennai@btos.in என்ற மின் அஞ்சலில் குறைகளை தெரிவிக்குமாறும் அதற்கு அவரது அணியினர் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் எக்ஸ் தளத்தில் ஏ.ஆர்.ரகுமான் கூறியிருந்தார்…

‘சிலர் என்னை எல்லா நேரத்திலும் சிறந்தவர் (Greatest of All Time GOAT) என்று அழைக்கிறார்கள். ஆனால் இப்போது நான் பலி ஆடு (Goat)’ ஆகிறேன் என்று ஏ.ஆர்.ரகுமான் வேதனை தெரிவித்துள்ளார்.மறக்குமா நெஞ்சம் என்ற பெயரில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி சென்னை அருகே பனையூர் ஆதித்யாராம் பேலஸ் சிட்டியில் நேற்றிரவு நடந்தது.
இதனை கண்டு ரசிப்பதற்காக ஆயிரக்கணக்கானோர் டிக்கெட் பெற்று நூற்றுக்கணக்கான கிலோ மீட்டர் பயணித்து சென்னைக்கு வந்தனர். நிகழ்ச்சி நடக்கும் இடம் அருகே ஓ.எம்.ஆர். சாலையில், பார்வையாளர்களின் வாகனங்களால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் பார்வையாளர்கள் நிரம்பி விட்டதாகவும், இதனால் டிக்கெட் பெற்றிருந்தும் ஏராளமானோர் வெளியேற்றப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.பாதிக்கப்பட்டவர்கள் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் நேற்று மாலையில் இருந்து ரகுமானின் மறக்குமா நெஞ்சம் நிகழ்ச்சி பரபரப்பாக பேசப்பட்டது.
மேலும் ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். பார்வையாளர்கள் அமர்வதற்கான இருக்கை முதல் பார்க்கிங் வரையில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குளறுபடி செய்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன…


