Saturday, April 11, 2026

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழப்பு…

Must read

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். இந்த மலைத்தொடர் தான் கேரள – தமிழக எல்லையாகவும் திகழ்கிறது. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி 20 கிலோ மீட்டருக்கு மேல், வனப்பகுதிக்குள் செல்கின்றன. இந்த மலைப்பகுதியில் யானைகள் அதிகம் வசித்து வருகின்றன. கடந்த 25 ஆண்டுகளில் இந்தப் பகுதியில் ரயிலில் அடிபட்டு சுமார் 25க்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழந்துள்ளன.
யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பதை தடுக்க, நீதிமன்ற உத்தரவின்படி தமிழக வனத்துறையின் சார்பில் ஏஐ உதவியோடு இயங்கும் தெர்மல் கேமராக்கள், மதுக்கரை முதல் வாளையார் வரை பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தமிழக எல்லைப்பகுதிகளில் வசிக்கிற யானைகள் கண்காணிக்கப்படுகின்றன. இதனால் யானைகள் ரயிலில் அடிபட்டு இறப்பது தடுக்கப்பட்டுள்ளது. ஆனால் கேரள வனப்பகுதியில் தெர்மல் கேமராக்கள் பொருத்தப்படவில்லை என்பதால், யானைகள் ரயிலில் அடிபட்டு உயிரிழப்பது தொடர் கதையாகி வருகிறது. கேரள வனப்பகுதியான வாளையார் பூங்கா அருகே இன்று காலை 4.30 மணியளவில், கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயில் பாலக்காடு நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற 4 வயது ஆண் யானையின் மீது ரயில் மோதியது. இந்த விபத்தில் யானை உடல் சிதறி உயிரிழந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மற்றும் காவல்துறையினர் உயிரிழந்த யானையின் உடல்பாகங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து வன ஆர்வலர் பாண்டியராஜா கூறுகையில், “கேரளா எல்லைப் பகுதியான வாளையார் அருகே ரயில் மோதி யானை உயிரிழந்திருப்பது வருத்தமளிக்கிறது. எட்டிமடை – மதுக்கரை இடையே தமிழக வனத்துறையின் சிறப்பான முயற்சியால் 12 கோபுரங்களில் தலா இரண்டு கேமராக்கள் உட்பட மொத்தம் 24 தெர்மல் சென்சிங் கேமராக்கள் பொருத்தப்பட்டு யானைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த வழித்தடத்தில் 2022 அக்டோபர் மாதம் முதல் ரயில் மோதி யானைகள் எதுவும் உயிரிழக்கவில்லை.

எனவே தமிழக வனத்துறைக்குட்பட்ட பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது போல வாளையார் – கொல்லங்கோடு இடையேயும் தெர்மல் சென்சிங் கேமராக்கள் பொருத்தப்பட்டு கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட வேண்டும். அப்போதுதான் இதுபோன்று ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதை தடுக்க முடியும். ஒவ்வொரு வருடமும் இந்தியா முழுவதும் 10 முதல் 15 யானைகள் ரயில் மோதி உயிரிழக்கின்றன. எனவே ரயில்வே துறை இந்த விஷயத்தில் முழு கவனம் செலுத்த வேண்டும்” என்றார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...