Wednesday, February 18, 2026

அரசியல் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து – தேர்தல் ஆணையம் நடவடிக்கை

Must read

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் (தேசிய/மாநில/பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள்(RUPP) மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951ன் பிரிவு 29A இன் விதிகளின் கீழ் இந்திய தேர்தல் ஆணையத்தில் (ECI) பதிவு செய்யப்பட்டுள்ளன. சட்ட விதிகளின் கீழ்,அரசியல் கட்சியாக பதிவு செய்யப்பட்ட எந்தவொரு சங்கமும், சின்னம், வரி விலக்குகள் உள்ளிட்ட சில சலுகைகள் மற்றும் சலுகைகளைப் பெறுகிறது. அரசியல் கட்சிகளைப் பதிவு செய்வதற்கான வழிகாட்டுதல்களில், ஒரு கட்சி 6 ஆண்டுகள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவில்லை என்றால், அக்கட்சி பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படும். 2019ம் ஆண்டு முதல், தொடர்ச்சியாக 6 ஆண்டுகளாக ஒரு தேர்தலில் கூட போட்டியிடாத அத்தியாவசிய நிபந்தனையை நிறைவேற்றத் தவறிய பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPP) அடையாளம் கண்டு பட்டியலில் இருந்து நீக்கும் நாடு தழுவிய நடவடிக்கையை தலைமை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இந்நடவடிக்கையின் முதல் கட்டத்தில், ஆகஸ்ட் 9, 2025 அன்று 334 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. தொடர்ச்சியாக, இரண்டாம் கட்டத்தில், 6 ஆண்டுகளாக தொடர்ந்து நடத்திய தேர்தல்களில் போட்டியிடாததன் அடிப்படையில், செப்டம்பர் 18, 2025ல் 474 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டது. இவ்வாறு, கடந்த 2 மாதங்களில் 808 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகைய மேலும் முன்னெடுக்க, கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் (அதாவது 2021/-22, 2022/-23, 2023/-24) நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் தங்கள் வருடாந்திர தணிக்கை செய்யப்பட்ட கணக்குகளை சமர்ப்பிக்காததற்காகவும், தேர்தல்களில் போட்டியிட்ட போதிலும் தேர்தல் செலவு அறிக்கைகளை தாக்கல் செய்யாததற்காகவும் 359 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் (RUPP) அடையாளம் காணப்பட்டுள்ளன. இவை நாடு முழுவதும் உள்ள 23 வெவ்வேறு மாநிலங்கள்மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவை. எந்தவொரு கட்சியும் தேவையற்ற முறையில் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்பதை உறுதி செய்வதற்காக, அந்தந்த மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களின் முதன்மை செயல் அதிகாரிகள் இந்த பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு (RUPP) நோட்டீஸ் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. தொடர்ந்து, சம்பந்தப்பட்ட முதன்மை செயல் அதிகாரிகளால் விசாரணை மூலம் கட்சிகளுக்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும்.
முதன்மை செயல் அதிகாரிகளின் அறிக்கைகளின் அடிப்படையில் எந்தவொரு பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியையும் (RUPP) பட்டியலில் இருந்து நீக்குவது குறித்து தேர்தல் ஆணையம் இறுதி முடிவை எடுக்கிறது என்று தேர்தல் ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, எந்தெந்த மாநிலங்களின் எத்தனை கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது என்ற எண்ணிக்கையும் வெளியிட்டுள்ளது. அதில் உத்தரப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 121 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசத்தை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் உள்ள மஹாராஷ்டிராவில் 44 கட்சிகளின் அங்கீகாரமும், 3 ஆம் இடத்தில் உள்ள தமிழ்நாட்டில் 42 கட்சிகளின் அங்கீகாரமும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நான்காம் இடத்தில் உள்ள டெல்லியில் 40 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளன. இதேபோல, 359 பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளை (RUPP) தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. இதுகுறித்த பட்டியல் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கட்சிகள்

தமிழகத்தில் ஈஸ்வரனின் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஜவாஹிருல்லாவின் மனிதநேய மக்கள் கட்சி, தமீமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், எழுச்சி தேசம் கட்சி, கோகுலம் மக்கள் கட்சி பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழர் தேசிய முன்னணி, தமிழ்நாடு மக்கள் உரிமைக் கட்சி, விடுதலை மக்கள் முன்னேற்றக் கழகம், திரிணாமுல் தமிழ்நாடு காங்கிரஸ் உள்ளிட்ட 42 கட்சிகள் நீக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

விஜய் வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள் விதித்த போலீசார்..!

வேலூர் அடுத்த அகரம்சேரியில் வரும் 23 ஆம்தேதி தவெக தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கிறது. இதற்காக 33 ஏக்கரில் இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன....

மார்ச் 7 வேலூர் வரும் பிரதமர் மோடி: ஏற்பாடுகள் தீவிரம்

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை ( என்டிஏ) வலுப்படுத்தும் விதமாகவும், புதிய கட்சிகளை கூட்டணியில்...

தமிழ்நாட்டில் மார்ச் 16-இல் மாநிலங்களவை தேர்தல்: வெளியானது அறிவிப்பு

தமிழ்நாட்டில் விரைவில் காலியாகும் 6 மாநிலங்களவை இடங்களுக்கான தேர்தல், மார்ச் 16ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலங்களவையில் தமிழகத்திற்கு மொத்தம் 18 இடங்கள்...

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...