கோவை மாவட்டம் கிணத்துக்கடவு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் அருணாச்சல மகன் கிருஷ்ணகுமார்(39) என்பவர் கடந்த 05.12.2020 -ஆம் தேதி அதே பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியம் மகன் நந்தகுமார் (29) என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் காவல் ஆய்வாளரால், கிருஷ்ணகுமார் (39) என்பவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு கோவை மாவட்டம் Bomb Blast Court-ல் விசாரணை நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை முடிவு பெற்று இன்று (17.10.2023) எதிரி கிருஷ்ணகுமாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய் 5000/- அபராதமாக விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட புலன் விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற சிறப்பு உதவி ஆய்வாளர் திரு. செந்தில்குமார் மற்றும் காவலர் திரு. முத்துராஜா (982) ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன்., அவர்கள் பாராட்டினார்கள்.


