கோவை மாவட்டத்தில் கஞ்சா குற்றவாளிகள் அதிரடி கைது

பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனை சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மலுமிச்சம்பட்டி பிரிவு அருகில் சென்று சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த சாரதி பெஹ்ரா மகன் சந்திப் குமார் பெஹ்ரா(22) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 6 கிலோ 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர் மற்றும் பேரூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறையினருக்கு கஞ்சா விற்பனைக்கு வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகில் உள்ள இருசக்கர வாகனம் நிறுத்தும் இடத்தில் சென்று சோதனை மேற்கொண்டபோது கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சேர்ந்த லத்தீப் மொல்லா மகன் மதியார் ரஹ்மான் மொல்லா (26) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 5 கிலோ கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து மேற்படி நபரை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர். இவ்வாறாக கோவை மாவட்டத்தில் 11.30 கிலோ கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர்.


