திருவெண்ணைநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மனகுப்பம் அருகே உள்ள திருமண மண்டபத்திற்கு எதிரே ஆய்வாளர் திரு.செல்வராஜ் உதவியாளர் திரு.மணிகண்டன் மற்றும் காவலர்கள் தலைமையில் வாகனத் தணிக்கையில் இருந்தபோது
அவ்வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது கண்டறிந்து
காவல்நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் பொறக்கன்தாங்கள் பிள்ளையார் கோவில் தெரு, செல்வம் என்பவரின் மகன் கிரண் குமார் வயது 22 மற்றும் திருக்கோவிலூர் தாலுகா எம்.குன்னத்தூர் பகுதியை சேர்ந்த ஏழுமலை என்பவரின் மகன் செல்வம் வயது 47, கிருஷ்ணமூர்த்தி என்பவரின் மகன் யுவராஜ் வயது 36 ஆகிய மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து இரு சக்கர வாகனம் மற்றும் சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான 168 கிலோ எடை கொண்ட ஹான்ஸ், cool lip, vimal, tobbaco போன்றவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து எதிரிகள் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.


