அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது…
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின்கிழ் இயங்கும் அனைத்து தனியார் பள்ளிகளும் காலாண்டு விடுமுறை முடிந்து அக்டோபர் 3ஆம் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் காலாண்டு தேர்வு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வந்தது. 2 வாரங்கள் நடந்த தேர்வு இன்றுடன் (27.09.2023) நிறைவடைந்தது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்டோபர் 8ஆம் தேதி வரை விடுமுறை நீட்டிக்கப்பட்டது. பள்ளிக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு 28ஆம் தேதி முதல் அக்டோபர் 2ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


