Thursday, April 9, 2026

டெல்லியில் அமித்ஷாவுடன் சந்திப்பு..!

Must read

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று டிசம்பர் 2-ந் தேதி சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது தம்மை அதிமுகவில் மீண்டும் சேர்ப்பது மற்றும் தனிக்கட்சி தொடங்குவது பற்றி அமித்ஷாவிடம் ஓ.பன்னீர்செல்வம் தமது இறுதி முடிவை தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுகவில் தங்களை மீண்டும் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். பாஜக இதற்கான அழுத்தத்தை எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கும் எனவும் நம்பினார் ஓ.பன்னீர்செல்வம். ஆனால் பாஜக தரப்பில் தமக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை விட்டே வெளியேறுவதாக அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம்.இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம், திமுக அணியில் இணைவாரா? விஜய்யின் தவெக அணிக்கு போவாரா? என விவாதங்கள் நடைபெற்றன. இந்த நிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் உள்ளிட்டோருடன் ஓ.பன்னீர்செல்வம் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு சில முடிவுகள் எடுக்கப்பட்டன.

அதில்,டிசம்பர் 10-ந் தேதி எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ் உள்ளிட்டோரை மீண்டும் கட்சியில் சேர்ப்பது பற்றி ஏதேனும் முடிவு எடுக்கப்படுமா? என பொறுத்திருந்து பார்ப்பது
அதிமுக பொதுக்குழுவில் முடிவு எதுவும் எடுக்கப்படாத நிலையில் டிசம்பர் 15-ந் தேதி தனி அரசியல் கட்சியை தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டதாக நமது மின்னம்பலத்தில் பதிவு செய்திருந்தோம்.
இதனையடுத்து ஓ.பன்னீர்செல்வம் நேற்று திடீரென டெல்லி சென்றார். ஓ.பன்னீர்செல்வத்தின் டெல்லி பயணம் தொடர்பாக பல்வேறு தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன

புதிய அரசியல் கட்சியை முறைப்படி பதிவு செய்ய டெல்லி சென்றார்
பாஜகவில் இணைய முடிவெடுத்துவிட்டார்
பாஜக மூத்த தலைவர்களை சந்தித்து தம்மை மீண்டும் அதிமுகவில் சேர்க்க எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கடி தர வேண்டும் என பேசினார் என்பதுதான் அந்த தகவல்கள்.
இது தொடர்பா பாஜக மூத்த தலைவர்களிடம் நாம் விசாரித்த போது, டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று இரவு ஓ.பன்னீர்செல்வம் சந்தித்து பேசினார். அப்போது, 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணி வெற்றி பெற அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களை மீண்டும் கட்சியில் சேர்ப்பது முக்கியம் என்று சொன்னார் ஓபிஎஸ். அத்துடன் அதிமுகவில் தங்களை மீண்டும் சேர்க்காவிட்டால் டிசம்பர் 15-ந் தேதிக்குப் பின்னர் தனிக்கட்சி தொடங்கும் முடிவில் இருப்பதையும் அமித்ஷாவிடம் ஓபிஎஸ் தெரிவித்தார். இதனை கேட்டுக் கொண்ட அமித்ஷா, டிசமப்ர் 10-ந் தேதிக்குப் பிறகு அதிமுக பொதுக்குழுவுக்குப் பின்னர் சென்னை வரும் போது பேசிக் கொள்ளலாம் என்று மட்டும் ஓபிஎஸ்ஸிடம் சொல்லி அனுப்பிவிட்டார்  என்றனர்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...