கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுக்கா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கல்யாணசுந்தரம் (38) மற்றும் கார்த்திக்@கார்த்திக் குமார் (33) ஆகியோர்கள் கடந்த 2014-ம் ஆண்டு பொள்ளாச்சி தாலுக்கா பகுதியில் கதிர்வேல் (53) என்பவரது வீட்டிற்குள் புகுந்து மரணம் விளைவிக்கக் கூடிய கொடுங்காயத்தை ஏற்படுத்தி கொள்ளையடித்த குற்றத்திற்காக பொள்ளாச்சி தாலுக்கா காவல் நிலையத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் கல்யாணசுந்தரம் (38) மற்றும் தங்கராஜ் மகன் கார்த்திக்@கார்த்திக் குமார்(33) ஆகியோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கின் விசாரணை பொள்ளாச்சி சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை இன்று (08.11.2023) முடிவு பெற்று எதிரிகளான கல்யாணசுந்தரம் மற்றும் கார்த்திக்@கார்த்திக் குமார் ஆகியோர்களுக்கு தலா 7 ஆண்டு சிறைதண்டனை மற்றும் ரூபாய் 7,000/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் திரு. நாட்டுதுறை (PC 1358) ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் பாராட்டினார்.


