Friday, April 10, 2026

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

Must read

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 210 தொகுதிகளில் எங்கள் கூட்டணி நிச்சயம் வெற்றிப் பெறும். அதிமுக பெரும்பான்மையான இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும்” என்று நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், எடப்பாடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி இருக்கிறோம். தமிழ்நாட்டின் முன்மாதிரி தொகுதியாக எடப்பாடியை மீண்டும் மாற்றிடும் வகையில் பணிகளை மேற்கொள்வோம் என்றார்.மேட்டூர் உபரி நீரை 100 ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை திமுக அரசு அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக புறக்கணித்து வருகிறது என்று குற்றம்சாட்டிய ஈபிஎஸ், அதிமுக ஆட்சி அமைந்ததும் அந்தத் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று சூளுரைத்தார். மேலும் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிமுக ஆட்சி காலத்தில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவோம் என்றும் உறுதியளித்தார். ஆ ராசா ஆடியோ இணையதளங்களில் வெளியானது. அதைத்தான் நான் கிருஷ்ணகிரி கூட்டத்தில் பேசினேன் என்று கூறிய எடப்பாடி பழனிசாமி, அதில் கூறப்பட்டுள்ள விஷயங்கள் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்காமல் திமுக தலைமை என் மீது பாய்வதால் என்ன பலன்? என்றும் கேள்வி எழுப்பினார். திமுக ஊழல் பட்டியலை ஆளுநரிடம் வழங்கி உள்ளோம் என்று கூறிய பழனிசாமி, திமுக அமைச்சர்கள் ஊழல் குறித்து அமலாக்கத் துறையே சட்டம் – ஒழுங்கு டிஜிபி வசம் மூன்று முறை அறிக்கை அளித்துள்ளது. ஆனால் அந்த அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. அதனால் தான் நீதிமன்றம் சென்றோம். நீதிமன்றம் உத்தரவிட்ட பின்பும் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதில் காலதாமதம் ஆகிறது. அதிமுக ஆட்சி அமைந்ததும் இந்த விவகாரத்தில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
அதிமுக தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சி; மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற கட்சி; மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் விரும்பும் கட்சி. அதனால் மீண்டும் அதிமுக ஆட்சி அமையும் என்று எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்தார்.

முன்னதாக எடப்பாடி பகுதியில் அதிமுக தேர்தல் பணிமனையை அவர் திறந்து வைத்தார்.

- Advertisement -

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest article

தமிழ்நாட்டில் மீண்டும் அதிமுக ஆட்சி- வேட்பு மனு தாக்களின் போது எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை..

அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, சேலம் மாவட்டம், எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் உள்ள வட்டாட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் இன்று தனது...

கோவை வடக்கு தொகுதியில் ராஜஸ்தான் முதல்வர், அண்ணாமலை முன்னிலையில்  வானதி சீனிவாசன் வேட்பு மனுத் தாக்கல் !!!

தேசிய ஜனநாயக கூட்டணியின் கட்சியினர் - மேளதாளங்கள் முழங்க, ஆதரவாளர்கள் படைசூழ வேட்பு மனு தாக்கல் செய்தார் வானதி சீனிவாசன் !!! கோவை வடக்கு சட்டமன்றத்...

பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட பா.ஜ.க வினர் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களாக கோவை வடக்கு மற்றும் அவிநாசி தொகுதிக்கு அறிவிக்கப்பட்ட தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ மற்றும் மத்திய இணை...

வானதி vs அண்ணாமலை.. எடப்பாடி பழனிசாமி பாஜகவிற்கு வைத்த செக்.. நடுவில் செந்தில் பாலாஜி

அரசியல் சதுரங்க வேட்டை என்பது எல்லா கட்சிகளும் மேற்கொள்வது தான். இந்த முறை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கோவை மண்டலத்தை வைத்து வைத்த நகர்வு மிகப்பெரிய ராஜதந்திரமாகவே...

தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்

2026 தமிழக சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தமிழக காவல்துறை உயரதிகாரிகளை மாற்றி இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அதிரடி...