கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராஜ முகமது மகன் அசாருதீன் (34) என்பவர் கடந்த 2018- ம் ஆண்டு அவரது மனைவியை கொலை செய்த குற்றத்திற்காக அவர் மீது காரமடை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இவ்வழக்கின் விசாரணை கோவை சிறப்பு நீதிமன்றத்தில் (பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்) நடைபெற்று வந்தது. இவ்வழக்கின் விசாரணை இன்று (29.02.2024) முடிவு பெற்று குற்றவாளி அசாருதீனுக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.500/- அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
இவ்வழக்கினை சிறந்த முறையில் புலன்விசாரணை மேற்கொண்ட புலன்விசாரணை அதிகாரி மற்றும் சாட்சிகளை நீதிமன்றத்தில் சிறந்த முறையில் ஆஜர்படுத்திய நீதிமன்ற காவலர் கிருஷ்ணராஜ் (GR 1 1259) ஆகியோர்களை கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்கள் பாராட்டினார்.


