கோவையைச் சேர்ந்த செந்தில்நாதன் (60) என்பவர் ரூபாய் 1.50 கோடி மதிப்புள்ள அவரது நில பத்திரத்தை கடந்த 2020-ம் வருடம் அவரது நண்பர் வெங்கடேசனுக்கு கொடுத்து உதவியுள்ளார். வெங்கடேசன் அப்பத்திரத்தை போலி ஆவணங்கள் மூலம் விற்பனை செய்துள்ளார். இதனை அறிந்த செந்தில்நாதன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்களிடம் புகார் அளித்தார். இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டதன் பேரில் மாவட்ட குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டதில் மேற்படி வழக்கில் மோசடி செய்த நபர்களான திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்புராஜ் மகன் கண்ணன் (52), சின்னையன் மகன் மணி (55) மற்றும் அப்துல் ஜாஃபர் மகன் பாய்@முகமத் இத்ரீஸ் (39) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூபாய் 4,80,000/- பணத்தை பறிமுதல் செய்து மேற்படி நபர்களை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார். மேலும் மேற்படி வழக்கில் ஆறு குற்றவாளிகள் நீதிமன்ற காவலில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

சட்டத்திற்கு புறம்பாக குற்ற செயல்களில் யாரேனும் ஈடுபட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் எச்சரித்துள்ளார்.

குற்றங்களை தடுத்திட பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டாம். தயங்காமல் அழைத்திடுங்கள் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்சப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரின் ரகசியங்கள் காக்கப்படும்.


