கோவை மாவட்டத்தில் அனைத்து உட்கோட்ட காவல்துறையினர்களும் மேற்கொண்ட அதிரடி சோதனையில் பெரியநாயக்கன்பாளையம் உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 32 மது பாட்டில்களை பறிமுதல் செய்தும் , இதேபோன்று
பேரூர் உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 4 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 118 மது பாட்டில்கள் மற்றும் 7 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும், இதேபோன்று கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 6 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 110 மது பாட்டில்கள் மற்றும் 11 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும் , இதேபோன்று பொள்ளாச்சி உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 27 மது பாட்டில்கள் மற்றும் சுமார் 2 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும், இதேபோன்று வால்பாறை உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 6 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 408 மது பாட்டில்கள் மற்றும் 15 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும் , மேட்டுப்பாளையம் உட்கோட்டத்தில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 8 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 157 மது பாட்டில்கள் மற்றும் 12 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தும் , இதேபோன்று மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு பகுதிகளில் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 7 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 84 மது பாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் கள் என கோவை மாவட்டம் முழுவதும் சட்டத்திற்கு விரோதமாக மது பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்த 37 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து மொத்தம் 936 மது பாட்டில்கள் மற்றும் சுமார் 77 லிட்டர் கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து, மேற்படி நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மது பாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்தவர்கள் கைது… 936 மது பாட்டில்கள் பறிமுதல்… கோவை மாவட்ட காவல்துறையினரின் அதிரடி….


