Tuesday, February 17, 2026

தமிழ்நாட்டின் முதல் வன விலங்கு சிறப்பு சிகிச்சை மறுவாழ்வு மையம் – திறந்து வைத்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

Must read

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...

கமல் ஹாசன் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…

நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் (71) திரைத்துறையில் நாயகன், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், பாடகர் என பன்முகதன்மையுடன் சுமார் 65 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,...

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழப்பு…

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். இந்த மலைத்தொடர் தான் கேரள - தமிழக எல்லையாகவும் திகழ்கிறது. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும்...

கோவை மாவட்டம், வடகோவையில் உள்ள தமிழ்நாடு வன உயர் பயிற்சியக வளாகத்தில், தமிழ்நாடு வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட பல்வேறு புதிய திட்டங்களின் திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டனர். முன்னதாக, வனத்துறைக்காக புதிதாக வாங்கப்பட்ட துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை அவர் பார்வையிட்டார். பணியின்போது உயிர் நீத்த வனத்துறையினருக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத் தொடர்ந்து, ரூ.5.30 கோடி மதிப்பீட்டில் கோவையில் தமிழ்நாடு வனப்படை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் 123 துப்பாக்கிகள், 19 பிஸ்டல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை வனத்துறைக்கு வழங்கினார். மேலும், கோவை மாவட்டம் சிறுமுகை பெத்திக்குட்டை பகுதியில் ரூ.19.5 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வன உயிரின இடமாற்றம் மற்றும் சிகிச்சை மையத்தை காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இது தமிழ்நாட்டில் வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட முதல் சிறப்பு சிகிச்சை மற்றும் மறுவாழ்வு மையமாகும். அதேபோல், ரூ.8 கோடி மதிப்பீட்டில் கோவை சாடிவயல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள யானை முகாம் மற்றும் ரூ.2 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட்ட மின்னணு ஆவண காப்பக சேமிப்பகத்தையும் அவர் திறந்து வைத்தார். இந்த மின்னணு ஆவண காப்பகத்தின் மூலம் சுமார் 200 ஆண்டுகள் பழமையான ஆவணங்களை பார்வையிட முடியும்.

இந்த நிகழ்வை தொடர்ந்து ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ரூ.31.72 கோடி மதிப்பீட்டிலான 12 புதிய திட்டப்பணிகளுக்கு துணை முதல்வர் அடிக்கல் நாட்டினார்.

மேலும் பள்ளி விளையாட்டு மைதானத்தில் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில், ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் உட்பட ரூ.162.52 கோடி மதிப்பீட்டில் 107 முடிவுற்ற திட்டப் பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். இதையடுத்து 10,626 பயனாளிகளுக்கு ரூ.136.45 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.முன்னதாக விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “கோவைக்கு புத்தாண்டு பரிசாக ரூ.10 கோடி மதிப்பில் புதிய ஹாக்கி மைதானம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இனி சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் இங்கும் நடைபெறும். SIHS காலனியில் உயர் மட்ட ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு 2010 ஆம் ஆண்டு கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்டது ஆனால், அதிமுக ஆட்சியில் அதனை கிடப்பில் போட்டுவிட்ட நிலையில், தற்போது மீண்டும் அந்த மேம்பாலம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...

கமல் ஹாசன் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…

நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் (71) திரைத்துறையில் நாயகன், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், பாடகர் என பன்முகதன்மையுடன் சுமார் 65 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,...

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழப்பு…

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். இந்த மலைத்தொடர் தான் கேரள - தமிழக எல்லையாகவும் திகழ்கிறது. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும்...

வரும் 6ஆம் தேதி முதல் விருப்பமான பெற்றுக் கொள்ளலாம் தவெக அறிவிப்பு..!

சட்டப் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 6 முதல் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.