அடர்ந்த மேகங்கள் சென்னைக்கு மிக அருகில் உள்ளன. அடுத்த சில நிமிடங்களில் அவை சென்னை மீது விழுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.
இதனால், அடுத்த சில மணி நேரங்களுக்கு சென்னையில் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதுவரை விட்டு விட்டு பெய்து வந்த மழை, இனி தொடர்ந்து 1 மணி நேரம் அல்லது அதற்கு மேலாக கூட பெய்வதற்கு வாய்ப்புகள் உள்ளன.
சென்னை மீது 150 கி.மீட்டர் அகலத்துக்கு விரிந்துள்ள அடர்ந்த மேகங்கள், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் விழுவதற்கும் ரொம்ப ரொம்ப வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது.
நாளை ஒரு நாள் மட்டும் இந்த புயலின் தாக்கம் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருக்கும். நாளை இரவு அல்லது 5ம் தேதி காலையில் இருந்தே புயலின் தாக்கம் குறைந்துவிடும்


