Tuesday, February 17, 2026

5 கிலோ தங்கம் கொள்ளை.. கார் பறிமுதல்…

Must read

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...

கமல் ஹாசன் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…

நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் (71) திரைத்துறையில் நாயகன், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், பாடகர் என பன்முகதன்மையுடன் சுமார் 65 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,...

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழப்பு…

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். இந்த மலைத்தொடர் தான் கேரள - தமிழக எல்லையாகவும் திகழ்கிறது. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும்...

தருமபுரியில் 5 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது…

கோவை ராஜவீதியில் பிரசன்னா (வயது 40) என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவர் புதன்கிழமை இரவு தனது கடைக்கு தேவையான 5 கிலோ எடையுள்ள புதிய நகைகளை பெங்களூருவில் இருந்து வாங்கிக்கொண்டு காரில் கோவை திரும்பினார். அவருடன் கடையில் பணியாற்றும் விஜயகுமார், சுரேஷ்குமார், ஜெய்சன் ஆகியோரும் பயணித்தனர்.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பூலாம்பட்டி என்ற பகுதியில் அவர்கள் சென்றபோது, 2 கார்களில் அடையாளம் தெரியாத நபர்கள் பின் தொடர்ந்து வந்தனர். அத்துடன், திடீரென பிரசன்னாவின் காரை வழிமறித்து அந்த கும்பல் கண்ணாடியை உடைத்து உள்ளே இருந்தவர்களை அடித்து கீழே தள்ளி விட்டனர். பின்னர், அவர்களிடம் இருந்து 5 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்ததுடன் காரையும் கடத்திச் சென்றனர்.

இதுகுறித்து காரிமங்கலம் காவல்நிலையத்தில் பிரசன்னா புகார் அளித்தார். அதன் பேரில், மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் விசாரணை நடைபெற்றது. மேலும், சம்பவ இடத்தில் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அந்த இடத்தில் கொள்ளையர்கள் பயன்படுத்திய இரும்புக் கம்பி, செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. அத்துடன், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டையில் காவல்துறையினர் இறங்கியுள்ளனர்.

- Advertisement -

More articles

- Advertisement -

Latest article

பெண்கள் கணக்கில் ரூ.5,000 வரவு ; மகளிர் உரிமைத்தொகை இனி ரூ.2,000..!

தமிழ்நாட்டில் மகளிருக்கு வழங்கப்பட்டு வரும் ரூ.1000 உரிமைத் தொகையை, திராவிட மாடல் 2.Oவில் (அடுத்த திமுக ஆட்சியில்) ரூ.2,000ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,...

கல்விக் கடன் தள்ளுபடி , முதியோர் ஓய்வூதியம் ரூ.2,000 – அதிமுகவின் 2-ம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்

வரும் 2026 சட்டமன்றத் தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ள சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், கட்சியின் மாவட்டச் செயலர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த...

கமல் ஹாசன் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவு…

நடிகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல் ஹாசன் (71) திரைத்துறையில் நாயகன், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கதாசிரியர், பாடகர் என பன்முகதன்மையுடன் சுமார் 65 ஆண்டுகளாக நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம்,...

ரயிலில் அடிபட்டு 4 வயது ஆண் யானை உடல் சிதறி உயிரிழப்பு…

மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்திருக்கிறது கேரள மாநிலத்தின் பாலக்காடு மாவட்டம். இந்த மலைத்தொடர் தான் கேரள - தமிழக எல்லையாகவும் திகழ்கிறது. கோவையிலிருந்து கேரளாவிற்கு செல்லும் பாசஞ்சர், விரைவு மற்றும்...

வரும் 6ஆம் தேதி முதல் விருப்பமான பெற்றுக் கொள்ளலாம் தவெக அறிவிப்பு..!

சட்டப் தேர்தலில் தவெக சார்பில் போட்டியிட விரும்புவோர் பிப்ரவரி 6 முதல் விருப்ப மனு பெற்றுக் கொள்ளலாம் என அக் கட்சியின் பொதுச் செயலாளர் என்.ஆனந்த் அறிவித்துள்ளார்.