இந்தியாவில், வரும் டிசம்பர் மாதத்திற்குள் 200 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசிகள் தயாரிக்கப்படும் என்று பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் பாஜக அலுவலகத்தை காணொலி காட்சி மூலம் திறந்து வைத்துப் பேசிய அவர், தற்போது இந்தியாவில் மாதத்திற்கு ஒரு கோடி தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில், வருகிற செப்டம்பர் மாதத்திற்குள் அதனை 10 கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
2 நிறுவனங்கள் மட்டுமே தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்த நிலையில், நாட்டில் தற்போது 13 நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தி செய்து வருவதாக கூறினார்.
இந்த எண்ணிக்கை 19 ஆக அதிகரிக்கும் என்றும் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.


