தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை, உள்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை அளித்து வருகிறார். உள்துறை சரியாக செயல்பட்டால் மற்ற துறைகளின் பணிகளும் சிறப்பாக செயல்படும் என்று முதல்வர் குறிப்பிட்டார் மேலும் அவர் பேசுகையில்
தமிழ்நாட்டில் விரைவில் 3,000 காவலர்கள் புதிதாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். கடவுச்சீட்டு விசாரணைக்காக காவல்நிலையத்திற்கு வரவேண்டிய நிலை மாற்றப்படும். எந்த சூழலிலும் பொதுமக்களுக்கு அச்சம் தரக்கூடிய சம்பவங்கள் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று காவல்துறைக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கினார். அரசுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் வகையில் கலவரம் செய்ய நினைப்பவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்
சாதி, வன்முறையை தூண்டும் பேச்சுகள் தடுக்கப்பட வேண்டும்; சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டுவோரை கண்காணிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கியுள்ளார். எந்த சூழ்நிலையிலும் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெறவில்லை. பாலியல் குற்றங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று முதல்வர் தெரிவித்தார்.


