வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை இன்று (மே 14) திறக்கப்படுகிறது.
மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார்.
வேறு பூஜைகள் எதுவும் இல்லை.
இரவு 9:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.
நாளை முதல் மே 19ம் தேதி வரை வழக்கமான பூஜைகள் நடைபெறும்.
ஆன்லைன்’ முன்பதிவு மூலம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர்.


